பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார்

அம்பேத்கார், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை. அவரது கல்வி, சமூக அவமானங்களை கடந்து, அனைவருக்குமான பொதுவான அரசியல் சட்டத்தை உருவாக்கியவர். இந்த புத்தகம் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கிறது.

ஆளண்டாப் பட்சி

எந்த நூலாயினும் முன்னுரை, பதிப்புரை ,மதிப்புரை  படித்தபின்பே  மைய நூலைப் படிப்பேன். அது ஒரு வழிகாட்டியாக  நூலைப் புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில்  ஆசிரியரின் முன்னுரையால்  ஒருவித பதற்றத்துடன் கதையைப் படிக்கத் துவங்க ....

தளபதி

ஆசிரியர் எண்டமூரி வீரேந்திநாத் அவர்களின் கிரவுஞ்ச வதம்   நாவல் தமிழ் மொழிபெயர்ப்பில்  வாசித்திருக்கிறேன்.  அந்த காதல் நாவல்  எழுதியவரா என்பதாகவும் நாவலா ?.அல்லது திரைப்படமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒருஅதிரடித் திரைப்படம் பார்ப்பது போல நாவலை வடிமைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

முல்லா கதைகள்

முல்லா கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் 69 கதைகள் உள்ளன. முல்லா, புகழ்பெற்ற வாத்களுக்காக செல்வாக்குள்ளவர், ஏற்படும் சிக்கல்களில் புத்திசாலித்தனம் காட்டுகிறான். இந்த கதைகள் விவகாரங்களை நகைச்சுவையுடன் விவாதிக்கின்றன, மகிழ்ச்சி தருகின்றன, மற்றும் முல்லாவின் அறிவை பற்றிய பல்வேறு காட்சிகளை வழங்குகின்றன.

பங்குச்சந்தை அனாலிஸிஸ்

இன்றைய வேகமான உலகில் பணம் பணம்  என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில்  மூன்றே நிமிடத்தில்  பல வேலைகள் செய்து பணக்காரனாக  ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில்  முடியாதென்பதை  உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு  இது சாத்தியமாகலாம்.

ஏழாம் சுவை

வாசித்தது:ஏழாம் சுவைஆசிரியர்:மருத்தவர் கு.சிவராமன்பக்கங்கள்:104பதிப்பகம்: விகடன் பிரசுரம்விலை:  80ரூபாய்வகை: மருத்துவக் கட்டுரைகள் மருத்துவர் சிவராமனைப் பற்றி தனியே சொல்லத்தேவையில்லை.பராம்பரிய உணவுகளுக்குத் திரும்பச் சொல்லும் அவரின் ஏதாவது ஒரு பேச்சையாவது  நாம் நிச்சயம் கேட்டிருப்போம்.  ஒருசிலர் அதனை செயல்படுத்தியும் இருப்போம்.இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையின்  தலைப்பு  'வாதம், பித்தம் கபம்- திரிதோட உணவு'.நம் உடலில் அடிப்படையாக உள்ளவை பற்றியது.புத்தகத்தின் கடைசித் தலைப்பு 'காதல் தரும் உணவு'. நம் மனதோடு தொடர்புடையது.உடலும் மனமும் ஒருங்கே ஒழுங்காக அமைந்துவிட்டால்  வியாதி விடையாற்றிச் சென்றுவிடும்.உடல்... Continue Reading →

சுந்தர காண்டம்

மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு அதை தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்...

வெண்ணிற இரவுகள்

"வெண்ணிற இரவுகள் "  முகநூல் தளத்தில் இந்த கதையைப் பற்றி பதிவு எழுதாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாயகி நாஸ்தென்காவைப் பற்றியும் அவ்வளவு பதிவுகள். அப்படி என்ன இந்தக் கதையில் இருக்கிறது என்ற ஆர்வம் இந்தக் கதையைப் படிக்க காரணமானது.

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்குதண்டனை  பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட.... அதனால் ஒவ்வொரு முறையும்  ஜனார்த்தனன் மனம்  பட்டபாடு.  இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின்  குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது  என குடும்பம் சார்ந்த  குறிப்புகள் ஒருபுறம்.

The Secret

இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது  ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் ,  ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும்  பூட்டிய கதவு,  எழும்பி நிற்கும் சுவர்,  தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும்  பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று  (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.

சுவீகாரம்

மெரீனா என்ற பெயர் + அட்டைப்படத்தை பார்த்ததும் (எஸ்.ஜானகி சிரித்த முகமும் கண்டு என்ற பாடலை குழந்தைகுரலில்  ஒருகுழந்தை பாடி பயிற்சி செய்வதுபோன்று பாடத்தொடங்கிகொஞ்சம் கொஞ்சமாக சுருதிமாறி கடைசியில் சிரித்தமுகம் கண்டு என்பது அழுத முகம் என குழந்தை பாடுவது போன்று பாடியிருப்பார் .) நகைச்சுவை கதைஎனநினைத்து வாங்கிவிட்டேன்.

கண்ணுக்குத் தெரியாத மனிதன்

ஹெச் .ஜி.வெல்ஸ் தன் வீட்டினரால் பெர்ட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். மூன்றுவயதிலேயே தன் அம்மாவால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர். ஏழாம் வயதில் காலொடிந்து மாதக்கணக்கில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலையில் அவனின் அப்பா அவருக்கு தாவரவியல், உயிரியல் , விண்வெளியியல் ஆகிய புதத்தகங்களை அறிமுகப்படுத்த பின்னாளில் இதனை  குறிப்பிட்டு வாழ்வில் முக்கியமான தருணம் என்று சொல்லியிருக்கிறார்.

கிடை

சிறுவயதில் கிடை மாடுகள் சாலையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தொலைவிலிருந்தே  கேட்க தொடங்கும்  மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் டிங் டிடிங்டாங் சத்தமும் டக்டக் குளம்படிச் சத்தமும் சாலையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு செல்லும் வரையிலும்  குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையிலும் தாளம் தப்பாத இசையாக  கேட்கும்.

டான்டூனின் கேமரா

புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு  நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.

சிநேகிதி

மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் "பிடித்த எழுத்தாளர்" தலைப்பில் கட்டுரை வரைக என்றகேள்விக்கு ராணிமுத்து வரிசையில் வாசித்த அகிலனின் நாவல்களால்   அவரின் ரசிகையான நான் சந்தோஷத்துடன் அகிலனைப் பற்றியும் அவரின்  'துணைவி ' நாவலைப்பற்றியும் எழுதினேன்.

தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories

விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்ற விகடகவிராஜன் எல்லோருக்கும் தெரிந்த  தெனாலிராமன். புத்தகத்தில் 27 கதைகள் உள்ளன. தனக்கு வந்த ஆபத்தோ, உடனிருப்பவர்க்கு வரும் சங்கடமோ  தன்னுடைய சமயோசித அறிவினால் அழகாக திருப்பிவிட்டு ஒவ்வொருமுறையும்  "சபாஷ்" போடவைக்கிறான்

அறிவியல் விளையாட்டு

ஆன்மீகமோ,அறிவியலோ, கருத்துகளோ ,கணிதமோ, கதையாக, பாட்டாக, விளையாட்டாக குழந்தைகளிடம்  கற்றலை விதைத்தால் அது அவர்களை அறியாமலே மனதில் ஆழப்பதிந்துவிடும்.

சாயாவனம்(sayavanam)

சிதம்பரம் குழந்தையாக இருக்கும்போதே அவன் அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள். உருவத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவனாக திரும்பிவரும் சிதம்பரம், சாம்ப சிவத்திற்கு சொந்தமான சாயாவனத்தை விலைக்கு வாங்கி கரும்பாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறான்.

இன்பநினைவு

அகிலன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து வரிசையில் வாழ்வு எங்கே? நெஞ்சின் அலைகள், துணைவி, சிநேகிதி பால்மரக் கட்டினிலே இந்தகதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை.

இன்பமயமான தமிழகவரலாறு

சூழலியல் சீர்கேடு எப்படியெல்லாம் உருவாகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதுடன் நம் சந்ததியினரை எச்சரிக்கவும்  இந்த நூலை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும். 

நல்லதோர் வீணை

உடற் பிணியைப் போக்கும் ஓயாத மருத்துவ பணி. அதற்கு இணையாக மகளிரின் உள்ளத்திற்கு உரமூட்டும் வகையில் எழுத்துப் பணி இரண்டையும் சிறப்புறச் செய்த லெஷ்மி அவர்களுக்கு என் வணக்கங்கள்.

ரெட் பலூன்(Red Balloon)

"ரெட் பலூன்" சிறார் வகை நாவல். இது படமாக்கப்பட்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கப்பதக்கம் விருதையும், ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதெமி விருதையும்  பெற்றிருக்கிறது.

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை  செய்திருக்கிறோம் என்று.

குறிஞ்சி மலர்

வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான்.  மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!

ஜீவனாம்சம்

"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின்  'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர்  இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை  மட்டும் எடுத்து அழகாக  முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."

வாடி வாசல்(Vaadi vaasal)

"மாடு என்றால் செல்வம் அப்படிப்பட்ட செல்வத்தை, அதன் தொடர்பான பாரம்பரியமிக்க  வீர விளையாட்டை  வாடி வாசல்  என்ற  அழியாத கால்நடை சுவட்டை பதிப்பித்த 'காலச் சுவடு'க்கு நன்றிகள்."

கல்கியின் சிறுகதைகள்

"தந்தைக்கு தன் புதல்வியின் சங்கீத ஞானத்தைப் பற்றி மகா பெருமை. தன் வண்டியின் ஹாரன் சத்தத்திற்கு அடுத்து பெண்ணின் குரல்தான் அவருக்கு மிகப் பிடிக்கும்."

உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

வெள்ளத்தனைய மலர் நீட்டமாக உள்ளத்தனைய உயர்வு பெற்று  வாழ அனைவருக்கும் புத்தாண்டு  வாழ்த்துகள்!!

மறைந்து வரும் மரங்கள்

'எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையைின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக  அதிசயமாயுள்ளது அப்படித்தான் மரங்கள் அழிவதும்'

வாடா மலர்(vada malar)

தானப்பனும் குழந்தைவேலும் சிறுவர்களாக இருந்தபோது  கரித்துண்டுகளால் மீசை வரைந்து அதை வீட்டிலுள்ள கண்ணாடியில்  பார்க்க  முயற்சிக்க , அம்மா அப்பாவுக்கு பயந்து  பக்கத்திலுள்ள குட்டையில் பார்க்கின்றனர்.

வாஷிங்டனில் திருமணம்

"அலிபாபாவின் குகையின் கதவு திறக்க 'திறந்திடு சீசேம்' என்று சொல்ல வேண்டும். பல்வேறு அழுத்தங்களால் மூடிக்கிடக்கும் மனதை திறக்கும் சாவி, விசா இன்றி வாஷிங்டனில் திரும(ன)ணம் காண வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சா(வி)ர்."

புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்

"உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது."

Create a website or blog at WordPress.com

Up ↑