இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் , ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
சிறுவர்களுக்கான நீதி கூறும் உலகநீதி புராணத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது வரி 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்'என்பது. இதை விளக்கும் நீதிக்கதையைப் பார்க்கலாமா.
எங்கிருந்தோ வந்தான்!
அவனை எழுப்பாதீர்; அமைதியாய் தூங்கட்டும்! ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்.
அனாதை மரங்கள்
வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .
நல்லதோர் வீணை
உடற் பிணியைப் போக்கும் ஓயாத மருத்துவ பணி. அதற்கு இணையாக மகளிரின் உள்ளத்திற்கு உரமூட்டும் வகையில் எழுத்துப் பணி இரண்டையும் சிறப்புறச் செய்த லெஷ்மி அவர்களுக்கு என் வணக்கங்கள்.
நிழலின் நாயகன் : சத்யஜித் ரே
திரையுலக மாமேதை சத்தியஜித் ரேயின் நூறாவது பிறந்த நாளை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் வாழ்ந்த சமகாலத்தில் நாமும் வாழந்தோம் என்ற பெருமையுடன் அவர் படைப்புகளை நுகர்வோம்!
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
"வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு "கதை சொல்லியாக" வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்."
அப்படியே நில்
"அன்னை தெரசா மாதிரி வேண்டாம். சுயமரியாதைச் சுடர் மணியம்மை மாதிரி சேவை செய்ய விரும்புகிறேன்" "நீ சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். எனக்கோ வயது நாற்பத்தைந்து; உனக்கு இருபத்தேழு. என் மகளை விட ஐந்து வயதுதான் நீ மூத்தவள். இது பொருந்தாக் காமம். என் மனம் இதற்கு ஒருநாளும் ஒப்பாது"
தக்காளிச் சட்னியும், இரத்தமும்
"இன்னும் ஒருத்தன் மட்டும் வந்து மாட்டவில்லையே என்று எதிர் பாரத்துக் கொண்டிருக்கும் போதே ஆடு தானே வந்து தலை கொடுத்தாற் போல வந்து மாட்டிக் கொண்டான். வண்ணம் பூசப்படாதவனாக ஃப்ரெஷ்ஷாக வந்தவனை வண்ணத்தில் குளிப்பாட்டி விட்டார்கள். பாவம் நிராயுதபாணியாக வந்து மாட்டிக் கொண்டான்"
மதுவும் கொரானாதான்
"உயிரைக் குடிப்பது என்றானபின் மதுவென்ன? கொரானாவென்ன? இரண்டும் ஒன்றுதான்" "அரசாங்கமே இப்போதைக்கு இப்போதையை மீணடும் திறந்து விட்டிடாதே! நிறைய குடும்பங்களில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கட்டும்."
தனிமரம்
"பறவைகளுக்கிடையே வர்ணபேதம் இல்லை; அதனால் அவை மரத்தின் மேலே தங்குகின்றன. ஆனால் மனிதர்க்குள் வர்ணபேதம் உண்டு; அதனால் அவர்கள் மரத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த வர்ணபேதம் ஒழிய எத்தனை தலைமுறை ஆகுமோ. மரத்தின்மீது பறவைகள் சமத்துவமாக இருப்பதைப்போல, மண்ணில் மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதெப்போ?"
ரமாவின் கணா
இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான். "பெண் குள்ளம்" "உயரம் பொருத்தமில்லை" இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது.
முதிர் கன்னி
"உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ" "அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்.. என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்"
பேச்சாயி(ரத்னராஜு)
அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை "வாங்க போங்க" என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை. "போ " "வா "; என ஒருமையில் தான் கூப்பிடுவேன். எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது. கோவில் சுவற்றில் ஆலமரம் முளைக்கும் ரகசியம் போன்றது இது.
என் மூச்சுக் காற்று (ரத்னராஜூ)
அம்மா கொடுத்த மூக்கைத் துளைக்கும் அரோமா காஃபியை டம்ளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் ஊற்றி ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இடப்புறம் கொஞ்சம் தள்ளி மரப்பெஞ்சில் நான். அம்மாவோ அடுப்படியில், ஆனால் காதுகள் மட்டும் இங்கே. ஓசை யெழுப்பாமல் டிபன் வேலை நடக்கிறது. ஓசை வந்தால் நாங்கள் பேசுவது தெளிவாகக் காதில் விழாதல்லவா. சிறு சப்தம் கேட்டாலும் வேலையை நிறுத்திவிட்டு பேசுவதைக் கவனிப்பாள். ***** அன்று நான் , இன்று என் மகன். .
மானமிகு மணி (ரத்னராஜூ)
ஒரு நாயின் மனக் குமுறல்