இறையன்புவின் சிந்தனை  வானம்

பொறமை , எளிமை ,சுயநலம்,தேடல், நம்பிக்கை ,பிறப்பு  ,மாணவர்கள் போன்ற பல தலைப்புகளில் உள்ள  விளக்கங்கள் ,கருத்துகளும்  சிறப்பாக உள்ளன. முடிவெடுக்க முடியாது தடுமாறுவர்க்கு  இந்த புத்தகத்தை படிப்பது  சிறப்பாக  உதவும்.

மீண்டும் ஜீனோ

முதல் பதிப்பு1986.என்னிடம் இருப்பது  8-ஆம்பதிப்பு 2014. பத்து வருடங்கள்  கடந்த நிலையில் இப்போது  இ்ன்னும் எத்தனைபதிப்பு வந்துள்ளதோ  தெரியவில்லை. இயந்திரமனிதன்  (ரோபோட்) மெல்ல மெல்ல மருத்துவம், விளையாட்டு, உணவகம் என உள்நுழைந்து கொண்டிருக்க, அதன் அடுத்த கட்ட தொழில் நுட்பமாக (சாட்Gஜிபிடி) செயற்கை நுண்ணறிவு .  வருங்காலத்தில் மக்கள்   இயந்திரமாக செயற்கை முறையில்  மாற்றப்பட்டு,   கருத்து சுதந்திரம் தடுக்கப்பட்டு , அடிமைகளாக ஆளப்பட்டு, இயந்திரங்களே ஆளும் நிலைவந்தால் எப்படி இருக்கும் என்று  கற்பனை செய்ததன்  விளைவே இந்தக் கதை. ஒருமாற்றமாக திரைப்படம் போல்  இந்த விமர்சனத்தை பார்ப்போமே!

Create a website or blog at WordPress.com

Up ↑